கூட்டமைப்பின் செயற்பாடு அம்பலமானது: வெளிப்படுத்திய சாணக்கியன்

Mayoorikka
2 years ago
கூட்டமைப்பின் செயற்பாடு அம்பலமானது: வெளிப்படுத்திய சாணக்கியன்

கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் அமைதி காத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.