இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

Mayoorikka
2 years ago
இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் கம்பஹா பிரதேசத்திலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  
கொல்லப்பட்ட இளைஞன் அழகு கலை நிலையமொன்றில் இருந்த சமயம் அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்த சூட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.