தேசிய வைத்தியசாலைக்குள் எழுத்தாளரின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிப்பு!

Prathees
1 year ago
தேசிய வைத்தியசாலைக்குள் எழுத்தாளரின்  கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் விடுதிக்குள் புகுந்த இருவர், தலைமை எழுத்தாளரின்  கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் போதைக்கு அடிமையான இரு ஊழியர்களே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் கொள்ளையடிக்க வந்த இரு சந்தேகநபர்களும் வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் சீருடையுக்கு நிகரான சீருடைகளை அணிந்திருந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான வைத்தியசாலை ஊழியர்களால் வைத்தியசாலையில் பாரிய பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தீவு செய்த விசாரணையில் தெரிவித்தார்.