யால சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமரவீரவின் உறவினருக்கு பிணை

Prathees
1 year ago
யால சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமரவீரவின் உறவினருக்கு பிணை

யால பூங்காவிற்குள் டிஃபென்டர் வாகனத்தைஓட்டிச் சென்று வன விலங்குகளை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.மகிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதுவும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இருவரின் சரீரப் பிணையின் அடிப்படையில்.

அதன்படி, சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.