வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலையை சூத்திரத்துக்கு அமைய அதிகரிக்க புகையிலை மற்றும் மதுபானம் அதிகாரசபை தீர்மானம்

Prasu
1 year ago
வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலையை சூத்திரத்துக்கு அமைய அதிகரிக்க புகையிலை மற்றும் மதுபானம் அதிகாரசபை தீர்மானம்

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் சிகரெட் விலையை, விலை சூத்திரத்துக்கு அமைய அதிகரிக்க முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக  புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும்  ஒற்றையாக அல்லது சில்லறையாக  சிகரெட்  விற்பனை செய்யப்படுவதனை  நிறுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   

புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் புகைபிடிக்கும் வயது வந்தவர்களில்  51  சத வீதத்தினர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நம்பக்கூடிய சாத்தியப்பாடுகள்  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.