யாழ். பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது

Prasu
1 year ago
யாழ். பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது

யாழ். பளையில் துப்பாக்கி மற்றும் வாள் வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளனர்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர்  வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் மாலை குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, வாள் மற்றும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேகநபர் நேற்று (02) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.