கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சி

Kanimoli
1 year ago
கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சி

கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்தநிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்து வருவதுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.