வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் 100 நாள் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றோடு நிறைவு

Mayoorikka
1 year ago
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் 100 நாள் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றோடு நிறைவு

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டம் 100 நாளைத் தொட்டது. 

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த நிலையில், இன்று போராட்டம் 100 நாளை எட்டியது. 

இறுதி நாளான இன்று கிளிநொச்சி குமாரபுரம் பொதுது விளையாட்டு மைதானத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதி நாளான இன்று 16 பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.