தென்னை உற்பத்தி 20 சதவீதம் குறைவடையும் அபாயம்! தென்னை உற்பத்தியாளர் சங்கம்

Mayoorikka
1 year ago
தென்னை உற்பத்தி 20 சதவீதம் குறைவடையும் அபாயம்! தென்னை உற்பத்தியாளர் சங்கம்

இந்த ஆண்டு தென்னை உற்பத்தி 20 சதவீதம் குறைவடையும், அத்துடன் படிப்படியாக மேலும்  மூன்றாண்டுகளில் 30 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்  பேராசிரியர் தீபால் மேத்யூ இதனை  தெரிவித்துள்ளார். இன்று தென்னை தொழில் மோசமான நிலையில் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தத் துறைக்கு மேலும் பல பிரச்சனைகள் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னை உற்பத்தியில் படிப்படியாக வீழ்ச்சி ஏற்படும் எனவும், இந்த வருடம் 20 வீத வீழ்ச்சியை பதிவு செய்யும் உற்பத்தி, அடுத்த மூன்று வருடங்களில் அது 30 வீத வீழ்ச்சியை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்பாட்டு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக உரம் இல்லாததால் பயிர் உற்பத்தியில் 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உரங்கள் இன்று கிடைத்தாலும், தற்போதைய விலையில் அவற்றை பயிருக்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், ரசாயனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், தென்னை இலையின் அடிப்பகுதியில் காணப்படும் பூச்சிகளால் பரவும் வெள்ளை இலை நோய்க்கு சிகிச்சையளிப்பது கடினம், ஏனெனில் பரிந்துரைக்கப்பட்ட இந்த இரசாயனங்களை தெளிப்பதற்கு முறையான உபகரணங்கள் இல்லை என்றும் பேராசிரியர் மேத்யூ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர் அனுராதபுரத்தில் இப்பிரச்சினை கடுமையாக இருந்தது தற்போது குருநாகலுக்கும், அது  பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..