உலகில் 800வது கோடியாக பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்...

Nila
3 years ago
உலகில் 800வது கோடியாக பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்...

உலகின் மக்கள் தொகை 8 பில்லியனாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
 
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சாண்டோ ஸ்பிரிட்டோ மருத்துவமனையில் விவியானா வாலண்டே என்பவருக்கு நவம்பர் 12 ஆம் தேதி பிறந்த குழந்தையின் மூலமாக இந்த எண்ணிக்கையை உலகம் எட்டியுள்ளது.
 
800 கோடி மக்கள் தொகை என்ற எண்ணிக்கையை எட்டிய அந்த குழந்தைக்கு லியோனார்டோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
உலகின் மக்கள் தொகை உயர்ந்த போதும் இத்தாலியின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு விவியானா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4