மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு

Prabha Praneetha
1 year ago
மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு

நாட்டின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் விரிவாக்கம் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், விநியோகத் தடைகள், அதிக நேரடி மற்றும் மறைமுக வரிகள், மூலதனச் செலவு மற்றும் உள்ளீட்டு விலைகள் ஆகியவை வணிகச் செயற்பாடுகளுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.