இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கவிருக்கும் திட்டம்!
Mayoorikka
1 year ago
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையை போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.