மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தொடரும் கைதுகள்!

Mayoorikka
1 year ago
மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  தொடரும் கைதுகள்!

இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாக கூறி ஓமானில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று (திங்கட்கிழமை) காலை சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய துணை முகவர், அவிசாவளை பகுதியில் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கடத்தலின் பிரதான சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!