தங்க புத்தர் சிலை மற்றும் தங்க நகை பெட்டியை வைத்திருந்த 5 பேர் விளக்கமறியலில்

Prathees
3 years ago
தங்க புத்தர் சிலை மற்றும் தங்க நகை பெட்டியை வைத்திருந்த 5 பேர் விளக்கமறியலில்

தங்க புத்தர் சிலை மற்றும் தங்க நகைப் பெட்டியை வைத்திருந்த ஐந்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை பிரதான நீதவான் ஆர்.பி.என்.கே.ரங்கோட்கே உத்தரவிட்டுள்ளார்.

மாத்தளை, உக்குவெல, உல்பத்த பிட்டிய, ரைத்தலவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க புத்தர் சிலை மற்றும் நகைப் பெட்டியை மாத்தளை தலைமையக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் பொலிசார் சுற்றிவளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் ரைத்தலவெல, உக்குவெல, கட்டுகஸ்தோட்டை, அரநாயக்க மற்றும் மஹாவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எம்.எம் முனலீம், எம்.பி.எம். இனான், எல்.பி.எம். ரிஷாத், எம்.ஏ.எஸ்.சி. முகமது மற்றும் டி.எம். ஷப்ராமை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட விலையில்லா தங்க புத்தர் சிலை மற்றும் தங்க நகை பெட்டியில் விஞ்ஞான ரீதியான பெறுமதி உள்ளதா என விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புத்தர் சிலை 215 கிராம் எடையும் 11 செ.மீ உயரமும் கொண்டது. மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4