உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு

Prasu
3 years ago
உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் தயாராகி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கியது. 10 மாதங்களை கடந்தும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.

உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை ஒரு சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு முன்மொழிந்தது.

உக்ரைனில் 60,000 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4