தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

Prabha Praneetha
3 years ago
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை , விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.

திடீரென குழந்தையை காணதமையால், பெற்றோர் தேடிய வேளை , குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.

போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4