மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்து
Prabha Praneetha
1 year ago
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் வலியுறுத்தியுள்ளார்.
மின்சக்தி அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இது குறித்து தௌிவுபடுத்தியுள்ளார்.
மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியும் போதுமான டீசலும் இல்லை எனவும் பாரிய நிதி தேவைப்படுவதாகவும் நலிந்த இலங்ககோன் சுட்டிக்காட்டியுள்ளார்.