தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி

Prathees
1 year ago
தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி

பிரபல வர்த்தகர் திரு.தினேஷ் ஷாப்டர் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு பொலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் நேற்று இரவு காலமானார்.

நேற்று பிற்பகல், பொரளை மயானத்தில் அவரது காரில் கழுத்தை நெரித்து கைகள் கட்டப்பட்ட நிலையில் கல்லறை காவலாளி மற்றும் அவரது தொழிலாளி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் இறக்கும் போது அவருக்கு வயது 51.

உயிரிழந்த வர்த்தகர் காரில் வைத்து சில உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொரளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் பல கோடி ரூபா கடனுதவி வழங்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறாக குருந்துவத்தை மல்பாறை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைவர் நேற்று (14) பிற்பகல் சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரது மனைவி சிறிது நேரம் கழித்து அவரை அழைத்து பார்த்தபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த தலைவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர் வந்து பார்த்தபோது, ​​காரின் ஓட்டுனர் இருக்கையில் சேர்மன் கை கட்டப்பட்டு கழுத்தில் கம்பி கிடந்தது தெரியவந்தது.

அதன்போது, ​​உடனடியாக செயற்பட்ட நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளையும் கழுத்தில் இருந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

தலைவரின் காருக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தலைவரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!