பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மது விருந்து: பெருந்தொகையான வெற்று மதுபான போத்தல்கள் மீட்பு

Prathees
1 year ago
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மது விருந்து: பெருந்தொகையான வெற்று மதுபான போத்தல்கள் மீட்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் நேற்று (21ம் திகதி) நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​பெருந்தொகையான வெற்று மதுபான போத்தல்கள் மற்றும் பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெற்று மதுபாட்டில்கள் மற்றும் பீர் கேன்கள் குப்பைகளை அகற்றுவதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள குழியிலும், கழிவுநீர் அமைப்புடன் தொடர்புடைய பள்ளத்திலும் வைக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய உரப்பையில் போடப்பட்டு  குப்பைக் குழியில் வீசப்பட்டிருந்த கிட்டத்தட்ட ஆயிரம் காலி மதுபாட்டில்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.

சோதனைக்கு பின் காலி மதுபாட்டில்களை நசுக்கி குப்பை குழியில் வீச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இந்த பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் மறைந்திருந்தார். குறித்த வெற்று மதுபான போத்தல்கள் எவ்வாறு பல்கலைக்கழகத்திற்குள் சென்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!