போதைப்பொருள் பணம் தொடர்பான தகராறு: கிராண்ட்பாஸில் வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்

#Police #Arrest #Colombo
Prathees
1 year ago
போதைப்பொருள் பணம் தொடர்பான தகராறு: கிராண்ட்பாஸில் வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்

ஒன்றரை லட்சம் ரூபாய் பணத் தகராறில் 10 வயது  சிறுவனைக்  கடத்திச் சென்ற பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்கம் A/F3/U20, Randiya Uyana, Henamulla, Grandpass பொலிஸ் டொமைன் என்ற முகவரியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த குழந்தையின் தாத்தா இந்தப் பெண்ணுக்கு ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது.

அவளிடம் இருபதாயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 எஞ்சிய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் வழங்கப்படாததால்இ 10 வயதுடைய சிறுவன் தனது தாத்தாவுடன் நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் நின்ற வேளை  கடத்திச் செல்லப்பட்டு கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த பணப் பரிவர்த்தனை போதைப்பொருள் அடிப்படையிலானது என்றும், இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  குழந்தை கடத்தலுக்கு உதவிய மற்ற நபர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!