இலங்கை முழுவதும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஜேவிபி!

#SriLanka #Sri Lanka President #Protest
Mayoorikka
3 years ago
இலங்கை முழுவதும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஜேவிபி!

ஒரு வாரத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பதை ஜே.வி.பி அவதானித்து வருவதாகவும், கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்தால், ஜே.வி.பி பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அதன் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். .

இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இப்போது கூற வேண்டிய அவசியமில்லை எனவும், அரசாங்கம் என்ன செய்வது என்பது தொடர்பில் ஒரு வார காலம் காத்திருப்பதாகவும் ஜே.வி.பி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4