11 தடவைகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 1,507 பேரை இலங்கைப் படையினர் தடுத்துள்ளனர்.

Kanimoli
1 year ago
11 தடவைகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 1,507 பேரை இலங்கைப் படையினர் தடுத்துள்ளனர்.

இலங்கை தனது மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 தடவைகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 1,507 பேரை இலங்கைப் படையினர் தடுத்துள்ளனர்.
இலங்கையின் நாணயம் 2022 இல் அமெரிக்க டொலருக்கு 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்தது.
பண அச்சடிப்பு இரண்டு வருடங்களின் பின்னர் மக்களை வறுமையில் தள்ளியது மற்றும் மற்றவர்களை நம்பிக்கையை இழக்கச் செய்தது.
இந்தநிலையில் 2021 இல் 127 மாத்திரமே வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும்போது தடுக்கப்பட்டனர்.
எனினும் 2022 இல்  57 சந்தர்ப்பங்களில் 1,507 பேர் கைது செய்யப்பட்டதாக படைத்தரப்பு  கூறுகிறது
இதில் மொத்தம் 1,189 பேர் அவுஸ்திரேலியாவை அடைய முயற்சித்துள்ளனர்.
நாட்டை விட்டு செல்ல முற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் கடற்கரையிலும், அதைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் கொழும்பிலும் கைது செய்யப்பட்டனர்
மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக வெளியேற முயற்சித்தவர்களில் 964 பேர்; 20-39 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 277 பேர் 40-50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று இலங்கை கடற்படையினர் தரவு காட்டுகிறது.;.
இதேவேளை 2022 இல் உத்தியோகபூர்வமாக 311,269 பேர் தொழில்கள் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறினர்.
இது 2014 இல் 300,413 பேர் வெளியேறியதை விட அதிகமான எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!