பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள்!

#Test #Tamil Nadu #Tamil #Tamil People #Tamilnews #Tamil Student
Mani
1 year ago
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள்!

கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பமாகி முடிவுற்ற நிலையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று ஆரம்பம் ஆகிறது. இத்தேர்வினை ஒன்பது லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர் பொதுத் தேர்வுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 425 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 13,151 மாற்று திறனாளி மாணவர்களும் 264 சிறைவாசிகளும் எழுதி இருப்பதாக தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நடைபெற்ற முடிந்தபோது செய்முறை தேர்வில் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதாததும் குறிப்பிடத்தக்கது.