பொன்னாலையில் பிறந்து 34 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
பொன்னாலையில் பிறந்து 34 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!

பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வேளியேறியிருந்தது. அதனையடுத்து குழந்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன என கண்டுபிடிக்கப்படாத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைககளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். விதுஜன் கிஷான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4