குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதால் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிப்பு

#SriLanka #Lanka4 #Drug shortage #tablets
Kanimoli
3 years ago
குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதால் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிப்பு

குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 மேலும் குறித்த இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 குறித்த இரு வகையான மருந்துகளும் இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

 தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்த மருந்து பொருட்கள் நாட்டில் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4