வலஸ்முல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

PriyaRam
3 years ago
வலஸ்முல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

ஹம்பாந்தோட்ட - வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வலஸ்முல்ல - யஹல்முல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நான்கு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4