2022 ஆம் ஆண்டை விட இவ்வருடம் இதுவரை அதிகமான மனிதக் கொலைகள் பதிவு

#SriLanka #Death #Police #Lanka4
Kanimoli
3 years ago
2022 ஆம் ஆண்டை விட இவ்வருடம் இதுவரை அதிகமான மனிதக் கொலைகள் பதிவு

துப்பாக்கிப் பாவனையினால் அதிகரித்து வரும் கொலைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

 தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய நேர்காணலில் வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் தெரிவித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கையை விடவும் இவ்வருடம் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சமூகத்தின் பாதுகாப்பு அழிந்து வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தில் பெருமளவில் துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதால்,

 நகர்ப்புற சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ஆயுதங்களை களைய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4