டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

#SriLanka #Death #Hospital #Lanka4 #Dengue
Kanimoli
2 years ago
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் 49,759 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

 அவர்களில் 24,837 பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை நாடளாவிய ரீதியில் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அதிக டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4