இலங்கையில் காணாமல்போன 21 வயதான யுவதி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் காணாமல்போன 21 வயதான யுவதி!

செல்ஃபி எடுக்க முயன்ற பெண் ஒருவர் அத்தனகல்ல ஓயாவில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார். 

குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதான பாத்திமா ஃபஸ்லா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என நிட்டம்புவ பொலிஸார் அறிவித்துள்ளனர். 

குறித்த பெண் மேலும் இரு நண்பர்களுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவர்களுடன் அத்தனகலு ஓயாவிற்கு அருகில் சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கடற்படை நீர்மூழ்கிக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிட்டம்புவ பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4