விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

#SriLanka #weather #NuwaraEliya #kandy #Rain #Lanka4
Kanimoli
2 years ago
விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

 கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலக பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச செயலக பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் கற்பாறைகள் சரிந்து வீழ்தல், மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் என்பன தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4