நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய கார்; 3 பெண்கள் பலி!

#India #Death #Accident #2023 #Tamilnews #Died #hyderabad
Mani
1 year ago
நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய கார்; 3 பெண்கள் பலி!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத் ஐதர்ஷாக்கோட் பிரதான சாலையின் ஓரத்தில் 3 பேரும் வாக்கிங் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக நர்சனிகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.