யாழில் முக்கியம் வாய்ந்த இடத்திற்கு சென்ற கனேடிய உயர்ஸ்தானிகர்!
#SriLanka
#Canada
#Lanka4
Kanimoli
2 years ago
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் ஆழியவளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள S K மாதிரி பண்ணையின் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பில் பார்வையிட்டார்.
அக்கிராமத்தை சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, சர்வதேச தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த மாதிரி பண்ணையை அவர் பார்வையிட்டார்.
இதன்போது, குறித்த பண்ணை நிர்வாகி மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே