பிரித்தானியாவில் கார் மரத்தில் மோதி விபத்து - நால்வர் பலி

#Death #Accident #Road #Britain
Prasu
1 year ago
பிரித்தானியாவில் கார் மரத்தில் மோதி விபத்து - நால்வர் பலி

அதிகாலையில் கார் ஒன்று மரத்தில் மோதிய கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் பகுதியில் அமைந்துள்ள Ullenwood என்ற இடத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. 

நள்ளிரவு 2 மணி கடந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரே தொடர்புடைய சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். கருப்பு நிற Renault Clio கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது. 

இதில் அந்த வாகனத்தில் பயணித்த நால்வர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். தற்போது அந்த நால்வரையும் அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கருப்பு நிற Renault Clio கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது. இதில் அந்த வாகனத்தில் பயணித்த நால்வர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். 

தற்போது அந்த நால்வரையும் அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4