பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவிற்காக பணி புரிபவர்களை தடுக்க நடவடிக்கை
#Russia
#Law
#England
Prasu
11 months ago
பிரிட்டனில் ரஷ்ய அரசுக்காக பணிபுரியும் அனைவரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் புதிய பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிடில், சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா வெளிநாட்டு செல்வாக்கு பதிவு திட்டத்தின் (FIRS) மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் பொருள் ரஷ்ய அரசாங்கத்தால் அல்லது அதனுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தால் இங்கிலாந்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவரும் அறிவிக்க வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
