இங்கிலாந்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற முதியவர் மரணம்
#Death
#water
#England
#Old
Prasu
1 year ago
இங்கிலாந்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்றவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஸ்கெக்னஸ் அருகே இன்கோல்மெல்ஸ் கடற்கரையில், கடலில் தத்தளித்த இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடற்கரைக்கு அருகிலுள்ள நடைபாதையிலிருந்து கடலில் இறங்கிய அந்த நபர், குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரும் நீரில் மூழ்கி சிரமப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்கும் பணிகள் நடந்த போதிலும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
"இந்த மிகவும் துயரமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று லிங்கன்ஷயர் காவல்துறை (Lincolnshire Police)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
