வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவை கடக்க முயன்ற ஒருவர் மரணம்
#Death
#England
#Heart Attack
#Migrant
Prasu
10 months ago
வடக்கு பிரான்சில் உள்ள கடற்கரையிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இந்த ஆண்டு ஆபத்தான நீர்வழிப் பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 18 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனை அடைய முயன்ற ஒருவர் படகில் மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் பிரான்ஸ் திரும்ப முயற்சித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பவுலோன்-சுர்-மெர் நகருக்கு அருகிலுள்ள எக்விஹென் கடற்கரைக்கு அருகில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை உயிர்ப்பிக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்த போதிலும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே