லோல்டைகா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கென்யர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்

#Accident #fire #England #Military #Kenya #compensation
Prasu
9 months ago
லோல்டைகா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கென்யர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. 

அப்போது ஏற்பட்ட தீ அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்தன. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

c
Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4