சுவிற்சர்லாந்தில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறித்த மூவர் கைது

#Arrest #Police #Switzerland #money #Fake
Prasu
8 months ago
சுவிற்சர்லாந்தில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறித்த மூவர் கைது

சுவிற்சர்லாந்தின் ஃப்ரிபோர்க்கின் முர்டன் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் பலர் போலி பொலிஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறி, பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெரியளவில் பணம் பரித்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களை 41,000 பிராங்குகளை எடுத்து தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட வற்புறுத்தினர். மூன்று சந்தேக நபர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஃப்ரிபோர்க் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் ஒரு ஆப்கானிஸ்தானியரும் இரண்டு துருக்கியர்களும் என்றும், அவர்கள் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர். குற்றவாளிகளால் வைப்புச் செய்யப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4