பிரித்தானியாவில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் தொழிலாளர்கள்
#Protest
#England
#Workers
#2026
Prasu
1 hour ago
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பாதுகாப்பை வழங்கும் சுமார் 300 பொது காவலர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், இந்த ஆண்டு நான்காவது முறையாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறக்கவுள்ள புத்தாண்டு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பெரும் சவால்களை கொண்டுள்ளது. அதில் பிரதானமானது ஊழியர்களின் ஊதிய உயர்வு.
நாளைய தினம் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
“2026ம் ஆண்டில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க வேண்டுமானால், அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை மேற்பார்வையிடும் டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன், தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )