பிரித்தானியாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபர் கைது
#Arrest
#Murder
#London
#Indian
Prasu
3 months ago
கிழக்கு லண்டனில் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 57 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இல்ஃபோர்டில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தில் தலீப் சத்தா என்ற நபர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் அவரது மனைவி 58 வயதான வனேசா பன்ட்னி-சத்தா என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உள்ள எவரும் முன்வருமாறு பெருநகர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )