புதிய கணக்காய்வாளரான சமுதிகா ஜெயரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
புதிய கணக்காய்வாளரான சமுதிகா ஜெயரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன, இன்று (05) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 9 இன் படி, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் நாயகமாகவும், கணக்காய்வு சேவை ஆணையத்தின் தலைவராகவும் அவர் தனது திறமையின் அடிப்படையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். 

  நாட்டின் 42 வது கணக்காய்வாளர் நாயகமாக ஜெயரத்ன நியமிக்கப்பட்டார், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!