இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்.
#SriLanka
#rice
#Myanmar
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 weeks ago
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க், இந்த அரிசியை இன்று (09) வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளித்துள்ளார்.
இதன்போது, டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் சேதமடைந்ததாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியன்மார் நிதியுதவியை வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்த அரிசித் தொகையையும் கையளித்துள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்