இங்கிலாந்தில் கார் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் மரணம்
பிரித்தானியாவில், கார் ஒன்று சாலைப் பாலத்திலிருந்து விலகி, கீழே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதியதில், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.
லெய்செஸ்டர்ஷையரில் உள்ள லட்டர்வொர்த்தை நோக்கி கில்மோர்டன் லேனில் சென்றுகொண்டிருந்த ஒரு நீல நிற கார், சாலைப் பாலத்திலிருந்து எம்1 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தக் கார், எம்1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற ஃபியட் டுகாடோ மீதும் மோதியதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீல நிற காரில் இருந்த பதின்ம வயது இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மினிபஸ்ஸில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
(வீடியோ இங்கே )