நெடுந்தீவு கடற்பரப்பில் உயிருக்கு போராடிய தமிழக மீனவர் ஒருவர் மீட்பு!
#SriLanka
#Fisherman
#Rescue
#Neduntheevu
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
15 hours ago
நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக அவரின் படகு திசைமாறி நெடுந்தீவு கடற்பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய தினம் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )