ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய 30இற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!
#SriLanka
#prisoner
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய 61 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 33 பேர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதனை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 34-வது பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, ஜனாதிபதி ஒரு குழுவினருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
(வீடியோ இங்கே )