யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக பிரதிவாதி தரப்பினால் (யோஷித ராஜபக்ச தரப்பு) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுவொன்று தற்போது நிலுவையில் உள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதன் காரணமாக, மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் சாட்சிய விசாரணைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரச தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானித்தார்.
இதற்கமைய, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி மீண்டும் நடைபெறும் என நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN