இன்று நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
#SriLanka
#Colombo
#today
#water
#ImportantNews
#L4
Lakhi
2 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) காலை 8.30 முதல் 10 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை, வாதுவ, மதுகம, பேருவளை, அலுத்கம மற்றும் பயாகல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேலும், காலி மாநகர சபைப் பகுதிக்கும் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே