முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது

#Arrest #Lanka4 #Bribery #L4 #YoshithaRajapaksa #Commission
Prasu
11 hours ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணை ஒன்றின் பேரில் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஆணைக்குழு முன் ஆஜராவதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, யோஷித ராஜபக்ச இன்று காலை ஆணைக்குழுவிற்கு வந்தடைந்திருந்தார்.

விசாரணை தொடர்பாக நேற்று ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்கு காரணமாக குறித்த நாளில் ஆரஜான முடியவில்லை என யோஷித ராஜபக்ச ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4