பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து - பெண் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
யாழ்ப்பாணம்-கண்டி பிரதான சாலையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 56 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை (18) கண்டியிலிருந்து வவுனியாவுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தின் மீது குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலைத் தொடர்ந்து, பேருந்தின் பின் சக்கரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது ஏறியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையின் சவக்கிடங்கில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் பூனேவா பொலிஸார்இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே