கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் மரணம்
#Death
#people
#Lanka4
#Blast
#Indian
#Qatar
#L4
Prasu
1 hour ago
கத்தாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததை கத்தார் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
"ராஸ் லஃபான் சம்பவத்தில் 12 இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததை கத்தார் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது ஆன்மாக்களுக்காக பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 66 பேர் காயமடைந்ததாகவும் நாட்டின் எரிசக்தி அமைச்சர் முன்னதாக உறுதிப்படுத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே